தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இந்த இந்த மாவட்டங்களில்‌ லேசானது முதல்‌ கன மழை எச்சரிக்கை

 
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இந்த இந்த மாவட்டங்களில்‌  லேசானது முதல்‌ கன மழை எச்சரிக்கை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும்‌ தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, சேலம்‌, தர்மபுரி, நாமக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழையும்‌, ஏனைய மேற்கு தொடர்ச்‌சி மலையை ஒட்டிய (திண்டுக்கல்‌, தென்காசி) மாவட்டங்கள்‌, கன்னியாகுமரி மற்றும்‌ ஒரு சில உள்‌ மாவட்டங்கள்‌, கடலோர மாவட்டங்கள்‌, புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

17 ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர்‌, தர்மபுரி, சேலம்‌, நாமக்கல்‌, அரியலூர்‌, பெரம்பலூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மேற்கு தொடர்ச்‌சி மலையை ஒட்டிய (தேனி, திண்டுக்கல்‌, தென்காசி ) மாவட்டங்கள்‌, கன்னியாகுமரி மற்றும்‌ ஒரு சில உள்‌ மாவட்டங்கள்‌, கடலோர மாவட்டங்கள்‌, புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

18 ஆம் தேதி மேற்கு தொடர்ச்‌சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி) மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், மேலும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web