அவசரப்படாதீங்க! ரேஷன் கடைகளில் இந்த மாதம் முதல் அதிரடி மாற்றங்கள்!

 
அவசரப்படாதீங்க! ரேஷன் கடைகளில் இந்த மாதம் முதல் அதிரடி மாற்றங்கள்!

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் இந்த மாதம் முதல் அதிரடியாக பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சோதனை முறையில் இயங்கி வந்த பயோமெட்ரிக் முறை, இந்த மாதம் முதல் தமிழகம் முழுவதுமாக மீண்டும் பயோமெட்ரிக் முறையிலேயே பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இதனால் சில நடைமுறைகளை கடைப்பிடிக்க ரேஷன் கடை ஊழியர்களுக்கு உணவு வழங்கல் துறை அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி ஆதார் கார்டு புதுப்பிக்கப்படாமல் சிறு வயதில் பிடித்த ஆதார் கார்டு கைரேகை இருக்கும் பட்சத்தில் ரேஷன் கடையில் கைரேகை விழாது.

ரேஷன் கடைகளில், ஊழியர் பயோமெட்ரிக் முறைக்காக உங்களது கைரேகையை பெறும் போது, கைரேகை சரியாக விழாவிட்டால் பொருட்கள் வழங்கப்படமாட்டாது.

அவசரப்படாதீங்க! ரேஷன் கடைகளில் இந்த மாதம் முதல் அதிரடி மாற்றங்கள்!

18 வயதுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கச் செல்ல வேண்டும்.

ஒரு குடும்ப அட்டைதாரர்க்கு கைரேகை தவறாக காட்டும் பட்சத்தில் 10 நிமிடங்கள் கழித்து தான் மீண்டும் அந்த அட்டைக்கு ஊழியரால் பில் போட முடியும். வீணாக விற்பனையாளரிடம் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும்.

சமூக இடைவெளி மற்றும் முககவசம் அணியாமல் வரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கண்டிப்பாக பொருட்கள் வழங்ககூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படும் தேதி அறிவிப்பு பலகையில் இருக்கும் அதற்கு தகுந்தாற்போல் சிரமமின்றி உங்கள் பொருட்களை பெற்று கொள்ளலாம்.

அவசரப்படாதீங்க! ரேஷன் கடைகளில் இந்த மாதம் முதல் அதிரடி மாற்றங்கள்!

அனைவருக்கும் அனைத்து பொருட்களும் கண்டிப்பாக அந்த மாதம் இறுதிக்குள் கிடைக்கும் வகையில் வழி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆதார் பதிவு சரியாக இல்லாத பட்சத்தில் விற்பனையாளரால் பில் போட முடியாது அவரிடம் வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவும்.

கைரேகை பதிவாகாத அட்டைதாரர்கள் சேவைமையத்தில் ஆதார் புதிய கைரேகை பதிவு செய்யவும்.

மேற்கூறிய அனைத்து வழிமுறைகளையும் ஆகஸ்ட் மாதம் முதல் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

From around the web