இன்று முதல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடக்கம்

 
இன்று முதல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடக்கம்

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் செப்டம்பர் 1 முதல் 9ம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை பள்ளிகளும் மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்களை தவிர மற்ற அனைத்து மாணவர்களும் கல்லூரிகள் திறக்கப்பட்டன.

இன்று முதல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடக்கம்

இந்நிலையில் 2021-22-ம் கல்வியாண்டின் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று (4-ந்தேதி) அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இன்று முதல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடக்கம்

மேலும் தகுதியுள்ள அனைத்து மாணவர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்த வேண்டும். கல்லூரி வளாகங்களில் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை தவறாது பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

From around the web