இன்று (அக்டோபர் 25) காலை நிலவரப்படி தங்கம் சவரனுக்கு 24 ரூபாய் உயர்ந்தது!
Oct 25, 2021, 09:42 IST
சர்வதேச சந்தையின் நிலவரத்தை பொறுத்து தமிழகத்தில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 24 ரூபாய் உயர்ந்துள்ளது.
அதன்படி ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.36,144 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 3 உயர்ந்து ரூ.4,518 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.69,900 க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ. 400 உயர்ந்துள்ளது.
அதன்படி ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 70,300 விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.70.30 க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
From around the
web