விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினர் கரோலினா பிளிஸ்கோவா

 
விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினர் கரோலினா பிளிஸ்கோவா

லண்டனில் நடைபெற்று வரும் ‘கிராண்ட்ஸ்லாம்’ விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா, பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்காவை எதிர்கொண்டார்.

இதில் செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா 5-7, 6-4, 6-4 என்ற செட்களில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் ஆஷ்லி பார்ட்டியும், கரோலினா பிளிஸ்கோவாவும் மோதுகின்றனர்.

From around the web