குஷியில் தொண்டர்கள்... அருணாச்சல பிரதேசத்தில் பாஜக வெற்றி... 3வது முறையாக முதல்வராகிறார் பெமா காண்டு!
அருணாச்சலப் பிரதேசத்தில் பாஜக பெரும்பான்மையைப் பெற்றது, 60 இடங்களில் 46 இடங்களை வென்றது. இப்போதே மேள தாளங்கள் முழங்க வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
அருணாச்சலப் பிரதேசத்தில் பாஜக பெரும்பான்மையைப் பெற்றது, 60 இடங்களில் 46 இடங்களை வென்றது; சிக்கிமில் SKM ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையைக் கடந்து 60 இடங்களில் 46 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
பாஜக ஏற்கனவே 10 இடங்களில் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கு மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்றது. மொத்தமுள்ள 60 இடங்களில் 10 இடங்களில் போட்டியின்றி பாஜக வெற்றி பெற்றுள்ளதால், மாநிலத்தில் பாஜகவுக்கு சாதகமாக இருந்தது. முதல்வர் பெமா காண்டு மற்றும் துணை முதல்வர் சவுனா மெய்ன் ஆகியோர் ஏற்கனவே அந்தந்த இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
#Watch | Firecrackers being burst by BJP workers outside the party office in #Itanagar as the party is set to return to power in Arunachal Pradesh
— DD News (@DDNewslive) June 2, 2024
The ruling BJP crossed the halfway mark; won 15 seats leading on 31. National People's Party is leading on 6 seats. The majority… pic.twitter.com/fvY1pgm961
கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அருணாச்சல பிரதேசத்தில் பாஜக 41 இடங்களில் வெற்றி பெற்றது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின் முதல் கட்டமாக சிக்கிமில் உள்ள 32 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி ஒரே நேரத்தில் நடைபெற்றது. 2019 சட்டமன்றத் தேர்தலில் SKM 17 இடங்களிலும், SDF 15 இடங்களிலும் வெற்றி பெற்றது.
சட்டசபை தேர்தலை பொறுத்த வரையில் பா.ஜனதா 60 தொகுதிகளிலும் போட்டியிட்ட நிலையில், காங்கிரஸ் 19 தொகுதிகளில் மட்டுமே தனது வேட்பாளரை நிறுத்தியது. இது தவிர, தேசிய மக்கள் கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட சில முக்கிய கட்சிகளும் களத்தில் உள்ளன.
#WATCH | Celebration begins at the BJP office in Itanagar as the party is set to return to power in Arunachal Pradesh
— ANI (@ANI) June 2, 2024
The ruling BJP crossed the halfway mark; won 17 seats leading on 29. National People's Party is leading on 6 seats. The majority mark in the State Assembly is… pic.twitter.com/GEEfXggrEO
அருணாசலப் பிரதேசம் மற்றும் சிக்கிமில் இன்று காலை 6 மணிக்கு சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மாநிலத்தின் பல மாவட்டங்களில் உள்ள 24 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதன் முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்பட்டன.ஏற்கனவே அருணாசல பிரதேசத்தில் முதல்-மந்திரி பெமா காண்டு உள்பட 10 பா.ஜனதா வேட்பாளர்கள் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டனர்.
இதனால் மீதமுள்ள 50 தொகுதிகளில் மட்டும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது. இந்த 50 தொகுதிகளில் 133 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஓட்டு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே பா.ஜ.க அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. 10 மணி நிலவரப்படி ஓட்டுக்கள் எண்ணப்பட்ட 50 தொகுதி களில் 35 தொகுதிகளில் பா.ஜ.க வேட்பாளர்கள் முன்னிலை பெற்றனர். மதியம் 1 மணிக்கு அவர்கள் வெற்றி முகத்துடன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தனர்.
Counting of votes for the Arunachal Pradesh Assembly Elections concludes; BJP sweeps the elections, bags 46 seats out of 60 Assembly seats.
— ANI (@ANI) June 2, 2024
National People's Party - NPEP gets 5 seats. Nationalist Congress Party - NCP gets 3 seats, People's Party of Arunachal - PPA gets 2… pic.twitter.com/knXckEOnYM
நேரம் செல்ல செல்ல மேலும் 3 தொகுதிகளில் பா.ஜ.க. முன்னிலை பெற்றது. இதனால் அருணாசலப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 60 தொகுதி களில் 44 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. மேலும் 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதனால் அமோக வெற்றியுடன் ஆட்சி அமைக்கும் நிலைக்கு பாரதீய ஜனதா சென்று இருக்கிறது. அதே சமயத்தில் அங்கு காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட வெற்றி கிடைக்கவில்லை. 19 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்திய காங்கிரஸ் கட்சி அந்த மாநிலத்தில் பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர்களில் சிலர் மோசமான நிலையில் தோல்வியை தழுவினார்கள்.
அருணாசல பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்க உள்ள நிலையில் அந்த கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தை துவங்கியுள்ளனர். முதல்-மந்திரி பெமா காண்டுவை அந்த கட்சி தொண்டர்கள் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்கள். அவர் 3வது முறையாக முதல்-மந்திரியாக பதவி ஏற்க இருக்கிறார்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!