அதிர்ச்சி! சகாயம் ஐ.ஏ.எஸ். தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றம்!

 
அதிர்ச்சி! சகாயம் ஐ.ஏ.எஸ். தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றம்!

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் ம் பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், திரைத்துறையினர் என அவ்வப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயக் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு சகாயம் அரசியல் கட்சி தொடங்கினார். சகாயம் அரசியல் பேரவை தொடங்கி சட்டமன்ற தேர்தலுக்காக பரப்புரையும் மேற்கொண்டார் .

அதிர்ச்சி! சகாயம் ஐ.ஏ.எஸ். தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றம்!

இந்நிலையில் அவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதால் ஏப்ரல் 6ம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த ஏழு நாட்களாக அவர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்த நிலையில், அவருக்கு ரத்து அழுத்தம் குறைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். தொடர்ந்து 8வது நாளாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சகாயத்திற்கு உடல் நலத்தில் ரத்த அழுத்தம் குறைந்து கொண்டே வருவதால் தனிக்குழு அமைக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

From around the web