டெல்லியில் கடந்த 24 நேரத்தில் 3,567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. 10 பேர் பலி!..

 
டெல்லியில் கடந்த 24 நேரத்தில் 3,567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. 10 பேர் பலி!..

டெல்லியில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 நேரத்தில் 3,567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து மொத்த தொற்று எண்ணிக்கை 6,72,381 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இன்று ஒரே நாளில் 2,904 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,48,674 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 12,647 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்துள்ளதால், மொத்த எண்ணிக்கை 11,060 ஆக அதிகரித்துள்ளது.

From around the web