கனமழை... கார் மீது மரம் விழுந்ததில் இளம்பெண் மரணம்!
கேரள மாநிலம் பேரூர்கடவில் கார் மீது பெரிய மரம் விழுந்ததில் இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
காரில் தனது கணவருடன் தோளிக்கோடு பகுதியைச் சேர்ந்த மோலி (42) என்பவர் பயணம் செய்துக் கொண்டிருந்தார். இவர்களது கார், வாழையில ஆறம் கல்லு என்ற இடத்தில் இரவு 8 மணியளவில் சென்றுக் கொண்டிருந்த போது பெரிய ஆலமரம் ஒன்று இவர்களின் காரின் மேல் விழுந்துள்ளது. இந்த விபத்தில் கார் உடனடியாக நொறுங்கியது. மரம் கார் மீது விழுந்தவுடன் மோலியின் கணவர் உடனடியாக காரில் இருந்து வெளியேறினார், இதனால் மோலியின் கணவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் மோலியால் காரில் இருந்து வெளியே வர முடியவில்லை.
அதன் பின்னர், அங்கிருந்தவர்களின் உதவியுடன் காரை உடைத்து மோலியை வெளியே மீட்டு, உடனடியாக அவரை திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. சிகிச்சைப் பலனளிக்காமல் மோலி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து காரணமாக பேரூர்கடை - வாழையில சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது. மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. இதற்கிடையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், மழையால் சாலைகளில் மரங்கள் விழுந்ததால், பரவலான சேதம் ஏற்பட்டது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா