மஞ்சள் அலெர்ட்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை மற்றும் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக பல மாநிலங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனையடுத்து கேரளாவில் இடைவிடாது பெய்து வரும் கனமழையால் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதுவரை 282 பேர் உயிரிழந்துள்ளனர். 3 வது நாளாக பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கேரளாவில் பல மாவட்டங்களுக்கும் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் மற்றும் கேரளாவுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இத்தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் இன்று ஒரு சில இடங்களில் 7 முதல் 11 செமீ. மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!