களைகட்டும் தமிழகம்! இன்று ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்பு!

 
களைகட்டும் தமிழகம்! இன்று ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்பு!


தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்.6 மற்றும் 9ம் தேதிகளில் நடத்தப்பட்டது. இதில் பதிவான வாக்குகள் அக்.12ம் தேதி எண்ணப்பட்டன. முடிவுகளும் அறிவிக்கப்பட்டன.

இது குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு போட்டியின்றி மற்றும் போட்டி மூலம் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இன்று காலை 10 மணிக்கு பதவி பிராமணம் எடுத்துக்கொள்ள வேண்டும்.


தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் அந்தந்த மாவட்ட ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் கிராம ஊராட்சி அலுவலகத்தில் பதவி ஏற்க வேண்டும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


பதவி ஏற்றவர்கள் மட்டுமே நாளை மறுநாள் அக்22ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ள மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் மற்றும் கிராம ஊராட்சித் துணைத்தலைவர் தேர்தலில் போட்டியிடவோ அல்லது பங்களிக்கவோ அல்லது வாக்களிக்கவோ தகுதியுடையவர்கள் ஆவார்கள் என அறிவித்துள்ளது.

From around the web