வெதர்மேன் எச்சரிக்கை ... தமிழ்நாட்டில் தரமான சம்பவம் இருக்கு!
தமிழகத்தின் அண்டை மாநிலமாக உள்ள கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, மேட்டுப்பட்டி, சூரல்மலையில் அடுத்தடுத்த நிலச்சரிவு காரணமாக 290க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஒரு கிராமமே மண்ணில் புதையுண்ட நிலையில் அள்ள அள்ள சடலங்கள் வந்து கொண்டே உள்ளன. தொடர் மழையிலும் ராணுவம், கடற்படை மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.தோண்ட தோண்ட சடலங்கள் வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
அங்கு தொடர்ந்து தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், விமானப் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்நிலையில் வயநாட்டில் மீண்டும் மழை பெய்யுமா என்பது குறித்த தகவலை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ளார். இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “கேரள மாநிலத்தில் நேற்று இரவு முதல் வயநாட்டில் மழை இல்லை. கேரள மாநிலம் முழுவதும் தற்போது தெளிவான வானிலை உள்ளதாகவும், வழக்கமான பருவமழை அவ்வப்போது இடைவெளிவிட்டு தொடரும் எனவும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
வ
வயநாடு, நீலகிரி மற்றும் வால்பாறையில் மிக கனமழை ஆபத்து இல்லை. சென்னையில் சுட்டெரித்த வெயிலுக்கு பிறகு இன்று மழைக்கு நல்ல வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.சென்னையில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!