சோகத்தில் மூழ்கிய கிராமம்! சிறுமிகள் உயிரை காவு வாங்கிய கண்மாய்!

 
சோகத்தில் மூழ்கிய கிராமம்! சிறுமிகள் உயிரை காவு வாங்கிய கண்மாய்!


மதுரை மாவட்டத்திற்குட்பட்ட அழகர்கோவில் அ.வல்லாளப்பட்டியில் வசித்து வருபவர் ராமர். இவரது மகள் 14 வயது ஆண்டிச்சி செட்டியார்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.இவருடன் அதே பகுதியில் வசித்து வரும் அய்யனார்-சிந்துவின் மகள் 11 வயது சவிதா 8ம் வகுப்பு படித்து வந்தார்.

சோகத்தில் மூழ்கிய கிராமம்! சிறுமிகள் உயிரை காவு வாங்கிய கண்மாய்!


ஆயதபூஜை தினத்தில் இருவரும் சேர்ந்து குளிப்பதற்காக அருகில் உள்ள சிறுவாழை கண்மாய்க்கு சென்றனர். விளையாடிக் கொண்டே குளித்ததில் 2 பேரும் ஆழமான பகுதிக்கு சென்று சிக்கி விட்டனர். தண்ணீரில் மூழ்கி இருவருமே பரிதாபமாக மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.கண்மாயில் குளித்த மற்றவர்கள் கண்மாயில் குதித்து 2 சிறுமிகளையும் மீட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சோகத்தில் மூழ்கிய கிராமம்! சிறுமிகள் உயிரை காவு வாங்கிய கண்மாய்!

அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

From around the web