உஷார்! கொரோனா 3வது அலை இவைகளை பொறுத்தே அமையும்!

 
உஷார்! கொரோனா 3வது அலை இவைகளை பொறுத்தே அமையும்!


இந்தியாவில் கொரோனா 2 வது அலை பல மாநிலங்களில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது . இருப்பினும் 3வது அலை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி மருத்துவ வல்லுனர்கள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.குறிப்பாக மிக கவனமாக இருக்கும்படியும், பண்டிகை காலங்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்கும் படியும் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உஷார்! கொரோனா 3வது அலை இவைகளை பொறுத்தே அமையும்!


இது குறித்து தேசிய நோய்த்தடுப்புக்கான தொழில்நுட்ப ஆலோசனைக்குழு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவை பொறுத்தவரை இனி வரும் நாட்களில் விரைவான தடுப்பூசி பணிகள் மற்றும் கொரோனாவின் புதிய மாறுபாடுகள் ஏற்படாத நிலையில் மக்கள் கொரோனா தடுப்பு நடைமுறைகளை கடைப்பிடிப்பதை பொறுத்தே 3வது அலையின் பாதிப்புக்கள் அமையும் எனத் தெரிவித்துள்ளது.

உஷார்! கொரோனா 3வது அலை இவைகளை பொறுத்தே அமையும்!


இதுகுறித்து எய்ம்ஸ் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்தியாவில் பண்டிகை காலங்களில் கூடும் கூட்டங்கள் , அது சமயம் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், மக்களின் செயல்பாடுகளை பொறுத்தே 3வது அலை உருவாகும் காலம், பாதிப்புக்கள் அமையும் எனத் தெரிவித்துள்ளார்.

From around the web