தென் மாவட்ட மக்கள் அதிர்ச்சி... 10 நாட்களுக்கு இந்த ரயில்கள் ரத்து!
தமிழகத்தில் தென் மாவட்ட மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்திருப்பவை அந்தியோதயா ரயில்கள் . ரயில் முழுவதுமே முன்பதிவில்லா பெட்டிகள். ரயில் நிலையங்களில் அப்போதே டிக்கெட் எடுத்து பயணம் செய்து கொள்ளலாம்.இதனால் தென் மாவட்ட மக்களின் போக்குவரத்து தேவையை பெருமளவு இவை தீர்த்தன என்றால் மிகையில்லை. இந்நிலையில் தாம்பரத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
இதனையடுத்து இந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் தென் மாவட்ட மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தாம்பரம் மற்றும் நாகர்கோவில் முன்பதிவில்லா அந்யோதயா விரைவு ரயில் நாளை ஜூலை 22 முதல் ஜூலை 31ம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்நிலையில் தாம்பரம் ரயில் நிலைய மறு சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் அங்கிருந்து புறப்படும் அல்லது செல்லும் ரயில் சேவைகளை ஜூலை 22 முதல் ஜூலை 31 வரை 10 நாட்களுக்கு பல மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி தாம்பரம் மற்றும் நாகர்கோவில் முன்பதிவு இல்லா அந்தியோதயா விரைவு ரயில் 10 நாட்களுக்கும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா