ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் செயல்படாது!தெற்கு ரயில்வே !
Apr 23, 2021, 18:29 IST
தமிழகத்தில் கொரோனா அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தினமும் இரவு 10 மணி முல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், ஏப்ரல் 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு குறித்து தெற்கு ரயில்வே இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,தமிழகத்தில் ஏப்ரல் 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் அன்றைய தினம் டிக்கெட் முன்பதிவு மையங்கள் செயல்படாது. இருப்பினும் வீடுகளில் இருந்து ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு மற்றும் ரத்து செய்து கொள்வதில் தடை இல்லை. ரயில் நிலையங்களில் முன்பதிவு அல்லாத டிக்கெட் வழங்கும் மையங்கள் வழக்கம் போல் செயல்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
From around the
web