உஷார்... இன்று முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை அந்தியோதயா ரயில் சேவை ரத்து.. வைகை எக்ஸ்பிரஸ் பயணத்திலும் மாற்றம்!
தென்மாவட்டங்களுக்கு ரயிலில் பயணம் செய்பவர்கள் இந்த மாற்றங்களைத் தெரிஞ்சுக்கோங்க. தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைப்பெற்று வருவதால் இன்று ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை அந்தியோதயா ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்துள்ள தாம்பரம் ரயில் நிலையத்தில் தற்போது நடைபெற்று வரும் சிக்னல் மற்றும் பொறியியல் மேம்பாட்டு பணிகள் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை 27 விரைவு ரயில்கள் பல்வேறு இடங்களில் இருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருச்சி - பகத் கி கோத்தி, காரைக்கால் - லோக்மான்ய திலக், ராமேஸ்வரம் - அயோத்தியா , ராமேஸ்வரம் பனாரஸ் உட்பட 10 ரயில்கள் தாம்பரம் வழியாக இயக்கப்பட மாட்டாது 10 ரயில்களும், மாறாக அரக்கோணம் - செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தாம்பரம்- நாகர்கோவில் என இரு மார்க்கங்களிலும் இன்று ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 14ம் தேதி வரை அந்தியோதயா ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வைகை எக்ஸ்பிரஸ் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 14ம் தேதி வரை எழும்பூருக்கு பதிலாக செங்கல்பட்டில் இருந்து புறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!