ஜாலி... அரசு பேருந்தில் டூர் பேக்கேஜ் !
குடும்பத்துடன் சுற்றுலா செல்லவும், ஆன்மிக பயணம் மேற்கொள்ளவும் வீடுகளில் திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கும் தனியார் டிராவல்ஸ்களில் வாகனங்களை வாடகைக்கு அமர்த்திக் கொள்வோம். இந்நிலையில் மக்களின் தேவை மற்றும் வசதிகளின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் ஒப்பந்த அடிப்படையில் பேருந்து வசதி செய்து தரப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக அதிநவீன சொகுசு பேருந்துகள், குளிர்சாதனமுள்ள இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் தொலைதூரங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குழுவாக சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கும், அறுபடைவீடு கோயில்கள் மற்றும் பிரசித்திப் பெற்ற கோயில்களுக்கு தரிசனம் மேற்கொள்ள ஒப்பந்த ஊர்திகளை குறைந்த கட்டணத்தில் பேருந்து வசதி ஏற்பாடு செய்து தரப்படும். மேற்கண்ட பேருந்து வசதி சென்னையிலிருந்து பல்வேறு இடங்களுக்கும் மற்றும் இதர இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கும் ஏற்பாடு செய்யப்படும். கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnstc.in மற்றும் அதன் கீழ் தரப்பட்டிருக்கும் அலை பேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா