உஷார்! நாளை இந்தப் பகுதிகளில் மின் தடை!

 
உஷார்! நாளை இந்தப் பகுதிகளில் மின் தடை!


தமிழகத்தில் பகுதிவாரியாக மின்வாரியத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் மின் தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் வாழவந்தி துணை மின் நிலையத்தில் நாளை அக்டோபர் 11 திங்கட்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனையடுத்து நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என துணை மின் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

உஷார்! நாளை இந்தப் பகுதிகளில் மின் தடை!


அதன்படி மோகனூர், மோகனூர் சர்க்கரை ஆலை பகுதி, குட்லாம்பாறை, கீழ்சாத்தம்பூர், வாழவந்தி, மணப்பள்ளி, பாலப்பட்டி, எம்.ராசாம்பாளையம், காளிபாளையம், ஆரியூர், நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், புதுப்பாளையம், ராசாம்பாளையம், செங்கப்பள்ளி, பெரிய கரசப்பாளையம், சின்ன கரசப்பாளையம், நொச்சிப்பட்டி, பெரமாண்டம்பாளையம், குன்னிபாளையம், எல்லைக்காட்டூர், தீர்த்தாம்பாளையம், பேட்டப்பாளையம், தோப்பூர், மணியங்காளிப்பட்டி, நெய்க்காரன்பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பரமத்திவேலூர் மின்வாரிய செயற்பொறியாளர் உறுதி செய்துள்ளார்.

From around the web