இந்த ராசிக்காரர்களுக்கு பூர்வீக சொத்துக்களால் அலைச்சலும், டென்ஷனும் உண்டாகும்.

 
இந்த ராசிக்காரர்களுக்கு பூர்வீக சொத்துக்களால் அலைச்சலும், டென்ஷனும் உண்டாகும்.

நாளைய ராசிபலன்கள்

20-09-2021, புரட்டாசி 04, திங்கட்கிழமை,
பௌர்ணமி திதி இரவு 05.24 வரை
பூரட்டாதி நட்சத்திரம்
பௌர்ணமி விரதம்.
புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

இந்த ராசிக்காரர்களுக்கு பூர்வீக சொத்துக்களால் அலைச்சலும், டென்ஷனும் உண்டாகும்.

இராகு காலம்
காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

எம கண்டம்
காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

சுப ஹோரைகள்
மதியம் 12 மணி முதல் 1 மணி வரை
மதியம் 3 மணி முதல் 4 மணி வரை
மாலை 6 மணி முதல் 8 மணி வரை
இரவு 10 மணி முதல் 11 மணி வரை

இந்த ராசிக்காரர்களுக்கு பூர்வீக சொத்துக்களால் அலைச்சலும், டென்ஷனும் உண்டாகும்.

மேஷம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் வெற்றி உண்டாகும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பொன் பொருட்கள் சேர்க்கை உண்டு.

ரிஷபம்
உங்கள் குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த விஷயங்களில் இன்று கவனம் செலுத்தலாம். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கேற்ற புதிய வாய்ப்புகள்கிடைக்கும்.

மிதுனம்
எந்தவொரு செயல்களிலும் வெற்றி பெற ஒரு முறைக்கு பல முறை யோசித்து செயல்படுவது நல்லது. வார்த்தைகளை நிதானமாக நன்கு யோசித்து பேசுங்கள். நீங்கள் எது பேசினாலும் அது தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட வாய்ப்புகள் அதிகம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சலும், டென்ஷனும் உண்டாகும். இறுதியில் பலன்களும் பெரிதாக இருக்காது.

இந்த ராசிக்காரர்களுக்கு பூர்வீக சொத்துக்களால் அலைச்சலும், டென்ஷனும் உண்டாகும்.

கடகம்
இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படலாம். கவனமாக இருக்கவும். செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் தொடர்வதால், புதிய சுப காரியங்களைத் தவிர்க்கவும்.

சிம்மம்
தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் இன்று ஈடுபடுவதன் மூலமாக அனுகூலப் பலன்களை எதிர்பார்க்கலாம். பண வரவு அதிகரிக்கும் விஷயங்களில் ஈடுபடுவீர்கள். பொன் பொருள் சேரும்.

கன்னி
உங்களின் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். சுபகாரியங்கள் நடைபெறும். புதிய வாய்ப்புகள் உருவாகும். வரும் புதிய வாய்ப்புகளை தாராளமாக ஏற்றுக் கொள்ளலாம். வடக்கு திசை அனுகூலம் தரும். நெருங்கிய நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

துலாம்
குடும்பத்தில் சிறு சிறு சச்சரவுகள் ஏற்படும். தேவையற்ற வீண் செலவுகளால் சேமிப்பு கரையும். நண்பர்களுடனும், உறவினர்களுடனும் மனக்கசப்பு உண்டாகலாம். நிதானத்தைக் கடைப்பிடித்து, மெளனமாக இருந்தால் தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.

விருச்சிகம்
வியாபாரத்தில் நல்ல லாபம் வரும். நண்பர்கள், உறவினர்களால் எதிர்பாராத உதவி கிடைக்கும். உறவினர்களின் உதவியால் பெரிய பிரச்சனை ஒன்று தீர்வுக்குவரும். உடல் ஆரோக்கியம் சீராகும். கொடுத்த கடன் வசூலாகும்.

தனுசு
பண புழக்கம் அதிகரிக்கும் காலம் இது. தேவையான பொருட்களை கடன் இல்லாமல் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களின் திடீர் வருகையால் மாலை நேரத்தில் மகிழ்ச்சி ஏற்படும். புதிய தொழில் தொடங்குவதற்கான திட்டங்கள் நிறைவேறும். அனுகூலமான நேரம் தான். தைரியமாக நன்கு தெரிந்த சுயதொழிலில் ஈடுபடலாம்.

இந்த ராசிக்காரர்களுக்கு பூர்வீக சொத்துக்களால் அலைச்சலும், டென்ஷனும் உண்டாகும்.

மகரம்
பயணங்களால் உடல் சோர்வும் மன உளைச்சலும் உண்டாகும். கூடுமானவரையில் இன்று தேவையற்ற, அவசியமில்லாத தூர பயணங்களைத் தவிர்த்து விடுங்கள். வீண் விரயங்கள் அதிகரிக்கும் காலம் இது. வரவிருக்கும் விரயங்களை சுப விரயங்களாக புத்திசாலித்தனத்தால் மாற்றிக் கொள்ளுங்கள். மனைவி, மகள் என குடும்பத்தில் இருப்பவர்களுக்கு நகை வாங்குவது என சுப செலவாக சேமிப்பை பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.

கும்பம்
நினைத்த காரியம் நிறைவேறும். எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

மீனம்
குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். உடன் பிறந்தவர்களிடையே ஒற்றுமை குறையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் என்றாலும் சேமிப்பு கரைய வாய்ப்பு உண்டு. தெய்வ வழிபாட்டைத் தொடர்ந்து மேற்கொண்டு வாருங்கள். திங்கட்கிழமைகளில் சிவ வழிபாடு கைக்கொடுக்கும்.

From around the web