செல்வம் பெருக இன்று இதைச் செய்ய மறக்காதீங்க!!

 
செல்வம் பெருக இன்று இதைச் செய்ய மறக்காதீங்க!!


இன்று இந்த பஞ்சமி வழிபாடு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமியை அடுத்த ஐந்தாவது தினத்தில் தேய்பிறை பஞ்சமி திதி அனுஷ்டிக்கப்படுகிறது. இப்படி ஒவ்வொரு மாதமும் வருகிற பஞ்சமி திதியில் வாராஹியை வழிபட்டு வந்தால் எதிரிகளிடம் இருந்து நம்மை காத்து அருள்வாள் வாராஹி அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் இன்னல்கள், இடர்ப்பாடுகள், எதிர்ப்புகள் அனைத்தையும் வெற்றி கொள்ள வைக்கும் வழிபாடு தான் வாராஹி வழிபாடு.

செல்வம் பெருக இன்று இதைச் செய்ய மறக்காதீங்க!!


அபிராமி பட்டர் அபிராமி அந்தாதியில் கொண்டாடிய வாராஹி. இவளே நம் அனைத்து இன்னல்களில் இருந்தும் காப்பவளாக இருக்கிறாள். சப்த மாதர்களில் ஐந்தாவதாக இருக்கும் வாராஹியே சேனாதிபதி. இவள் விஷ்ணுவின் அம்சமாக திகழ்வதால் பாண்டவர்களை துன்பங்களிலிருந்து விடுவித்ததை போல நம்மை துன்பங்களிலிருந்து விடுபடச் செய்யவும் , எதிரிகளிடமிருந்து நம்மை காக்கவும் வாராஹி வழிபாடு சாலச் சிறந்தது.

செல்வம் பெருக இன்று இதைச் செய்ய மறக்காதீங்க!!

இந்நாளில் அதிகாலை எழுந்து, குளித்து நீராடி, வீட்டிலிருக்கும் பூஜையறையில் குலதெய்வ வழிபாடு, விநாயகர் பூஜை செய்ய வேண்டும். விரல் மஞ்சள், குங்குமம் வைத்து வழிபடலாம். வேண்டுதல்களை நிறைவேற சங்கல்பம் செய்து , எளிய ஸ்லோகங்களில் ஆராதனை செய்யலாம். பச்சை கற்பூரம் கலந்த பால்,தோலுடன் கூடிய உளுந்து வடை , வெண்ணெய் சேர்த்த தயிர் சாதம், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, எள்ளுருண்டை இவற்றை நைவேத்தியமாக வைத்து வழிபடுவதூ சிறப்பான பலன்களை தரும்.

செல்வம் பெருக இன்று இதைச் செய்ய மறக்காதீங்க!!


மாலை வேளைகளில் அருகில் இருக்கும் ஆலயங்களில் வாராஹி தரிசனம் செய்து , விரல் மஞ்சள் மாலை சமர்ப்பித்து, தேங்காயில் விளக்கேற்றி வழிபாட்டை நிறைவு செய்யலாம். இதன்படி தொடர்ந்து ஐந்து பஞ்சமிகளில் வாராஹியை வழிபாடு செய்து வர கேட்ட வரங்களை அள்ளித் தருவாள் வாராஹி . மேலும் இன்றைய தினத்தில் நம்மால் இயன்ற அளவு அன்னதானம் செய்வது , பானகம், நீர் மோர் வழங்குதல் இவற்றையும் செய்திட வாழ்வை குளிர்ச்சியாகவும், இனிமையாகவும் ஆக்குவாள் வாராஹி.

From around the web