இன்று விடுமுறை ! உற்சாகத்தில் மாணவர்கள்!
Sep 29, 2021, 05:50 IST
தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை அடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் . அதில் திருநெல்வேலி மாவட்டத்தில் அக்.6 மற்றும் 9 ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.
இன்று தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.
இதனால் இன்று ஒருநாள் மட்டும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
From around the
web