நாளை 2024-25ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல்!
இந்தியாவில் நடப்பாண்டின் 2வது பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று ஜூலை 22ம் தேதி திங்கட்கிழமை தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தொடர் இன்று முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை 19 அமர்வுகளுடன் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து 3வது முறையாக பிரதமராக பதவியேற்று இருக்கும் மோடி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து பிரதமர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவில் இன்று மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. ஆக்கப்பூர்வமான கூட்டத்தொடராக இது அமைய வேண்டும் என மக்களின் எதிர்பார்ப்பு அமைந்துள்ளது. மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் செயல்பட வேண்டும். பாஜக அளித்த அனைத்து வாக்குறுதிகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும். இந்தியா வளர்ச்சிக்கான பாதையில் தொடர்ந்து நடைபோடும் என்றார்.
கூட்டத் தொடரின் முதல் நாளில் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறாா்.இதில் இந்தியாவின் முக்கியப் பொருளாதார அளவீடுகளை அடிக்கோடிட்டுக் காட்டும். இந்த அறிக்கையில், நடப்பு நிதியாண்டின் பொருளாதார வளா்ச்சிக்கான கணிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும். 2ம் நாளான நாளை செவ்வாய்க்கிழமை 2024-25-ம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் முழு பட்ஜெட்டை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா