நாளை மத்திய பட்ஜெட் 2024... 10 ஆண்டுகால கோரிக்கைகள் நிறைவேறுமா?.. எதிர்பார்ப்பில் தமிழக அரசு!
இன்று இந்தியாவில் பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. நாளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார். 3 வது முறை பிரதமராக மோடி பதவியேற்றபிறகு இந்த பட்ஜெட் தாக்கல் நடைபெறுவதால் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்து நேற்று முதல்வர் ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டார்.
அதில், தமிழ்நாட்டில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள ரயில்வே திட்டங்களுக்கு நிதி விடுவிக்க வேண்டும். அதன் பிறகு சென்னை மெட்ரோ ரயில்வே திட்டத்திற்கு 3 வருடங்களாக விடுவிக்கப்படாமல் இருக்கும் நிதியையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.தாம்பரம் செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவு சாலைக்கான பணிகளுக்கு ஒப்புதல், சென்னை மற்றும் கோவை இடையேயான மெட்ரோ ரயில் சேவைகளுக்கும் ஒப்புதல் வழங்க வேண்டும். பத்து வருடங்களாக வருமான வரி சுமை குறைக்கப்படும் என்று நடுத்தர மக்கள் மிகவும் எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர்.
கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதி திட்டங்களின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்த வேண்டும். தமிழக மக்களின் கோரிக்கைகளை நிச்சயம் மத்திய அரசு நிறைவேற்றும் என எதிர்பார்ப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா