BIG NEWS!! வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!!

 
BIG NEWS!! வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!!

கடந்த நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை சரிபார்க்க பிப்ரவரி 28-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கி வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், டிஜிட்டல் கையொப்பம் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரிக் கணக்கை, ஆதார் ஓ.டி.பி., அல்லது ‘நெட்-பேங்கிங்’ அல்லது ‘டிமேட் உள்ளிட்ட கணக்கு வாயிலாக 120 நாட்களுக்குள் சரிபார்க்கப்பட வேண்டும்.

BIG NEWS!! வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!!

ஆனால் கடந்தாண்டுக்கான வரி செலுத்துவோர் பலரும் இன்னும் சரிபார்க்கவில்லை. அதனால் 2019-20 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை சரிபார்க்க பிப்ரவரி 28,2022 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள்து. அதற்குள் வருமான வரி கணக்கை சரிபார்க்காவிட்டால், அவர்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை என கருதப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31-ம் தேதி வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடைசி நாளாக இருக்கும். ஆனால் புதியதாக அரசு துவங்கியுள்ள வருமான வரி தளத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னையாலும், கொரோனா தொற்று காரணமாகவும் டிசம்பர் 31-ம் தேதி வருமான வரி தாக்கல் நடைமுறை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

BIG NEWS!! வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!!

அதன்படி வருமான வரி தாக்கல் செய்ய நாளையுடன் அவகாசம் நிறைவடைகிறது. அதனால் கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 27-ம் தேதி வரை வருமான வரித் துறையின் இணையதளம் மூலம் ரூ. 4.67 கோடி அளவுக்கு வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.

From around the web