3 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து கோர விபத்து.. ஒருவர் பலி.. 57 பேர் மீட்பு.. !
மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பை அருகே உள்ள பெலாப்பூரில் 3 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கட்டிடம் இடிந்து விழுவதற்குள் 2 பேர் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.அதிகாலை 4:50 மணிக்கு கட்டிடம் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது .
#WATCH | Maharashtra: Rescue operation by NDRF underway after a three-storey building collapsed in Navi Mumbai's Shahbaz village
— ANI (@ANI) July 27, 2024
Two people have been rescued, one person is reported missing; rescue operation underway https://t.co/0EOI2Iemmg pic.twitter.com/KcOuVun1hd
54பேர் உடனே மீட்கப்பட்டுள்ளனர், ஆனால் மேலும் 5 பேர் இடிபாடுகளில் சிக்கியிருந்த நிலையில், மூவர் மீட்கபட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்ததாகவும், இருவரை காப்பற்ற முயற்சிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருவதாகவும், இதற்காக பல்வேறு குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா