இமாச்சலப் பிரதேச சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தில் இன்று குடியரசுத் தலைவர் உரையாற்றுகிறார்

 
இமாச்சலப் பிரதேச சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தில் இன்று குடியரசுத் தலைவர் உரையாற்றுகிறார்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இமாசல பிரதேசத்திற்கு 4 நாள் பயணமாக நேற்று சிம்லா சென்று அடைந்தார். அம்மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதலமைச்சர் ஜெய்ராம் தாக்குர் மற்றும் அதிகாரிகள் குடியரசுத் தலைவருக்கு வரவேற்பு அளித்தனர்.

ராம்நாத் கோவிந்த் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றுகிறார். இமாச்சலப் பிரதேசம் மாநில அந்தஸ்து பெற்ற பொன்விழாவை ஒட்டி இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் அம்மாநிலத்தில் உள்ள தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் மட்டுமல்லாது முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 93 பேர், முன்னாள் முதலமைச்சர்கள், எம்.பி.க்கள், முன்னாள் எம்.பி.க்கள் உள்ளிட்டவர்களும் கலந்து கொள்கிறார்கள்.

From around the web