பேருந்தை கைகளால் தூக்க முயன்று அதகளமாக்கி அதிர வைத்த நபர்!

 
பேருந்தை கைகளால் தூக்க முயன்று  அதகளமாக்கி அதிர வைத்த நபர்!

வேலூர் மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. வழக்கம் போலவே பேருந்து நிலையத்தில் பலர் போதையில் சுற்றிக் கொண்டு திரிந்தனர். அதே போலவே போதையில் இருந்த ஒருவர் தனக்கு தானே பாட்டுப்பாடி சிரித்து நடனமாடி கொண்டிருந்தார்.
சிறிது நேரம் கழித்து திடீரென பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தை தம் கைகளால் தூக்க முயன்றார்.

பேருந்தை கைகளால் தூக்க முயன்று  அதகளமாக்கி அதிர வைத்த நபர்!

சுமார் அரை மணி நேரம் வரை இந்த முயற்சி தொடர்ந்தது. செய்ய முடியாததால் ஆத்திரம் அதிகமாகி பேருந்து டிரைவர் அருகிலுள்ள கதவை திறந்து இழுத்து அதிரும் படி சாத்தி விட்டு சென்றார்.
பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக காத்திருந்த பயணிகள் அவரை வேடிக்கை பார்த்து சிரித்தனர். இதனால் அவர்களை ஆபாசமான வார்த்தைகளால் திட்டி தீர்த்தார். சுமார் 2 மணி நேரம் தொடர்ந்து பேருந்துநிலையத்தை அதகளமாக்கிய குடிகாரரால் அங்கு பரபரப்பு நிலவியது.

பேருந்தை கைகளால் தூக்க முயன்று  அதகளமாக்கி அதிர வைத்த நபர்!


பேருந்து நிலையத்தை ஒட்டிய படியே டாஸ்மாக் கடைகள் அமைந்திருப்பதால் மது அருந்திவிட்டு பேருந்து நிலையத்தில் விழுந்து கிடப்பதும் பேருந்திற்காக காத்து நிற்கும் பயணிகளுக்கு தொல்லை கொடுப்பதும் தொடர்ந்து அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.

From around the web