வெடித்த சர்ச்சை.. அகிலேஷ் யாதவ் வழிபட்ட கோயிலை கங்கை நீரால் சுத்தம் செய்த பாஜகவினர்!
சமாஜ்வாதி கட்சித் தலைவரும், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், அகில இந்திய சார்பில் கனௌஜ் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் நேற்று கனலாஜ் சித்தபீத் பாபா கவுரி சங்கர் மகாதேவ் கோயிலுக்கு சென்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். இந்நிலையில், அகிலேஷ் யாதவ் வழிபாடு செய்துவிட்டு கோயிலை விட்டு வெளியேறிய பிறகு, பாஜகவினர் கோயில் வளாகத்தை கங்கை நீரால் சுத்தம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
In #UttarPradesh's #Kannauj, #BJP workers cleaned the temple with 'Gangajal' after #SamajwadiParty leader #AkhileshYadav visited it.#LokSabhaElections2024 pic.twitter.com/Mr7ENSjSZs
— Hate Detector 🔍 (@HateDetectors) May 7, 2024
இதனிடையே, இந்த சர்ச்சை குறித்து பாஜக தரப்பில், 'அகிலேஷ் உடன், பல முஸ்லிம் தலைவர்களும் கோவிலுக்கு வந்தனர். காலில் காலணிகளுடன் கோவில் வளாகத்திற்குள் நுழைந்தனர். எனவே கங்கை நீரால் கோவிலை சுத்தம் செய்து பூஜைகள் செய்தோம்.' இதேபோல், பாஜக நகர தலைவர் சிவேந்திர குமார் குவால் கூறுகையில், 'சில முஸ்லிம் பிரமுகர்களும், அவர்களுடன் வந்த சிலரும், காலணி அணிந்து கோவிலுக்குள் நுழைந்தது மட்டுமின்றி, கோவில் வளாகத்திற்குள் எச்சில் துப்பியுள்ளனர்' என்றார்.
இதற்கிடையில், சமாஜ்வாதி தலைவர் ஐ.பி. சிங் எக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அகிலேஷ் யாதவ் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால், கோவில் வளாகத்தை கங்கை நீரால் கழுவிய பாஜகவினர். முன்னதாக லக்னோவில் உள்ள முதல்வர் இல்லத்தையும் கங்கை நீரால் பாஜக கழுவியது. பிற்படுத்தப்பட்ட, தலித், எளிய மற்றும் சுரண்டப்பட்ட மக்களுக்கு இந்துக் கோயில்களில் வழிபட உரிமை இல்லை என்று பாஜக நம்புகிறது.
எனவே இம்முறை பிடிஏ, பிற்படுத்தப்பட்டோர், தலித், தாழ்த்தப்பட்டோர் மற்றும் சுரண்டப்பட்ட மக்கள் ஒன்றிணைந்து பாஜக ஆட்சியில் இருந்து வெளியேற வழி காட்டுவார்கள். அகிலேஷ் யாதவ் வழிபாடு செய்துவிட்டு சென்ற பின் பாஜகவினர் கோவில் வளாகத்தை சுத்தம் செய்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!