சிறுமியை கடத்திச்சென்ற நடத்துனர்.. கையும் களவுமாக கைது செய்த போலீசார்!
சிறுமியை ரயிலில் மடக்கி கடத்திய நடத்துனரை போலீசார் கைது செய்தனர். நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை தனியார் பஸ் கண்டக்டர் தில்லைவிளாகத்தை சேர்ந்த பாலசுப்ரமணியன் (31) கடத்தி சென்றதாக சிறுமியின் தந்தை வேதாரண்யம் போலீசில் புகார் செய்தார்.
அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்ரமணியன் சிறுமியை கடத்தி சென்றாரா அல்லது இருவரும் காதலித்து ஊரை விட்டு சென்றாரா என விசாரித்தனர். இருவரும் ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து ஈரோடு ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி ஈரோடு ரயில் நிலையத்தில் ரயில் நின்றதும் ரயில்வே போலீஸார் சோதனை நடத்தி இருவரையும் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
சிறுமியின் பெற்றோர் மற்றும் வேதாரண்யம் போலீசார் ஈரோடு சென்று சிறுமி மற்றும் பாலசுப்ரமணியை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து பாலசுப்ரமணியன் கைது செய்யப்பட்டார்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!