கைகால்கள் கட்டப்பட்டு சூட்கேசில் அடைத்து இளம்பெண் கொலை! திடுக்கிடும் தகவல்கள்!

 
கைகால்கள் கட்டப்பட்டு சூட்கேசில் அடைத்து இளம்பெண் கொலை! திடுக்கிடும் தகவல்கள்!

சேலம் மாவட்டத்தில் குமாரசாமிப்பட்டி மேற்கு தெருவில் வசித்து வருபவர் 27 வயதான தேஜ்மண்டல் என்ற பெண். இவர் அதே பகுதியில் மற்றொரு வீட்டையும் வாடகைக்கு எடுத்திருந்தார்.இவர் சொந்தமாக சேலத்தில் 3 இடங்களில் ப்யூட்டி பார்லர் நடத்தி வந்தார். இவரது கணவர் பிரதாப் சென்னையில் ஒரு நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். வேலை விஷயமாக சென்னை சென்ற பிரதாப் செல்போனில் தனது மனைவியை தொடர்பு கொள்ள முயன்றார். மாறி மாறி போன் செய்தும் அவர் எடுக்கவில்லை.

கைகால்கள் கட்டப்பட்டு சூட்கேசில் அடைத்து இளம்பெண் கொலை! திடுக்கிடும் தகவல்கள்!

உடனே வீட்டு உரிமையாளர் நடேசனுக்கு தகவல் கொடுத்தார். காவல்துறை உதவியுடன் அங்கு சென்ற நடேசன் வீட்டின் உள்ளே இருந்து துர்நாற்றம் வீசியதை கண்டார். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது படுக்கை அறையில் இருந்த அலமாரியில் இருந்து சூட்கேசில் இருந்து தண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது.


அதில் அரை நிர்வாண கோலத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இளம்பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் இருந்தது. சூட்கேசில் இருந்த சடலம் தேஜ்மண்டல் தான் என்பதை வீட்டில் உரிமையாளர் நடேசன் உறுதி செய்தார். சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது.


தேஜ் மண்டலுக்கு பள்ளப்பட்டியில் பாலியல் தொழிலாளிகளுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தேஜ்மண்டல் தங்கியிருந்த குடியிருப்பில் உள்ள காமிரா பதிவுகள் மூலம் ஆய்வுகள் செய்யப்பட்டன. அதில் தேஜ்மண்டல் தங்கியிருந்த அறைக்கு பக்கத்து அறையில் ஒரு ஆணும், பெண்ணும் சென்று வரும் காட்சிகள் பதிவாகி உள்ளது.

கைகால்கள் கட்டப்பட்டு சூட்கேசில் அடைத்து இளம்பெண் கொலை! திடுக்கிடும் தகவல்கள்!

அவர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்கள் இந்த கொலையை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறை தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது. இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

From around the web