தமிழ் ராக்கர்ஸ் நிர்வாகி திடீர் கைது... பெரும் பரபரப்பு!
புதிதாக ரிலீஸ் ஆகும் திரைப்படங்களை உடனுக்குடன் ஆன்லைனில் பதிவேற்றும் தமிழ் ராக்கர்ஸ் தளத்தின் அட்மின் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த இணையதளத்தில் அனைத்து புதிய படங்களும் வெளியான அன்றைய தினமே வெளியாகிவிடும். இது குறித்து இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வழக்குப்பதிவு செய்தும் அதனை பதிவேற்றம் செய்யும் அட்மினை கைது செய்ய முடியவில்லை. ஒவ்வொரு முறை இணையதளம் தடை செய்யப்படும் போதும் புதிய முகவரியில் இருந்து சட்டவிரோதமாக படங்களை பதிவேற்றம் செய்து வந்தது.
தமிழ் ராக்கர்ஸ் பைரசி டீம் அதிரடி கைது
அதேநேரத்தில் நீதிமன்றம் மூலம் தடை விதித்து நடவடிக்கை எடுத்த போதிலும் புதிய இணையதளம் தொடங்கப்படுவது வாடிக்கையாகவே இருந்து வருகிறது. இதனால் திரைப்படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்தனர். கோடிக்கணக்கில் செலவு செய்து மக்களுக்காக அளிக்கப்படும் போது வெளியான அதே நாளே இணையத்தில் ரீலீஸ் செய்வதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு தயாரிப்பாளர்கள் செய்வதறியாமல் திகைத்து வந்தனர். இந்நிலையில் கேரளத்தில் ஒரு திரையரங்கில் தனுஷின் ராயன் திரைப்படத்தை செல்போனில் பதிவு செய்து கொண்டிருந்த மதுரையை சேர்ந்த தமிழ் ராக்கர்ஸ் தளத்தின் முக்கிய அட்மின் ஸ்டீபன் ராஜை கேரள சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
முதல் நாள் காட்சியிலேயே இருக்கையில் சிறிய கேமரா வைத்து வீடியோ எடுத்துள்ளார். ஒரு படத்திற்கு ரூ.5000 கமிஷன் பெற்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக புதிய படங்களை அவர் பதிவேற்றம் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து சைபர் போலீஸார் நடத்திய விசாரணையில் 12 பேர் இணைந்து செயல்பட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!