அரசியலுக்கு வருகிறாரா சூப்பர் ஸ்டார் சூர்யா?! தலீத் அரசியல் பேசும் ‘ஜெய் பீம்’ !!

 
அரசியலுக்கு வருகிறாரா சூப்பர் ஸ்டார் சூர்யா?! தலீத் அரசியல் பேசும் ‘ஜெய் பீம்’ !!

நம்ம சூர்யாவுக்கு என்ன தான் ஆச்சு? என்கிற கேள்விகள் தான் கோலிவுட்டில் பலமாக எதிரொலிக்கிறது. ஜெய் பீம் புரோமோஷன் செய்திகளில் சூப்பர் ஸ்டார் சூர்யா என்கிற அடைமொழியோடு தான் சூர்யா தரப்பிலிருந்து பத்திரிக்கையாளர்களுக்கு அனுப்பப்படுகிறது. சூரரைப் போற்று படம் ஓடிடியில் ரிலீஸ் செய்வதற்கு பலமாக திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த போது, முரண்டு பிடித்து விடாப்பிடியாக ரிலீஸ் செய்தார்.

அரசியலுக்கு வருகிறாரா சூப்பர் ஸ்டார் சூர்யா?! தலீத் அரசியல் பேசும் ‘ஜெய் பீம்’ !!

சரி ஒரு படம் தானே என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு அடுத்தடுத்து ஷாக். தொடர்ச்சியாக அமேசான் ப்ரைம் மூலமாக நான்கு படங்கள் ரிலீஸ் செய்ய ஒப்பந்தம் செய்தார். இந்த ஜல்லிக்கட்டு காளையை எப்படி அடக்குவது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.

இன்னொரு புறம் அரசுக்கு எதிராகவும் சாட்டையை சுழற்றுவேன் என்று நீட் தேர்வு, விவசாயம், அரசு மருத்துவமனை என தைரியமாக குரல் கொடுக்கிறார். இதுவரை சினிமாவில் இருந்து அரசியலுக்கு வர துடித்தவர்கள் எல்லாரும் எம்.ஜி.ஆர். பார்முலாவையே கைக்கொண்டனர். லேட்டஸ்ட்டாக நடிகர் விஜய் இந்த ரகம். இன்னொரு புறம் மக்களின் பல்ஸைப் பிடித்து, சாதி இல்லை என்று சொல்லியபடியே சாதி சாயம் பூசிக் கொள்ளும் கதைகளில் நடிப்பது. நடிகர் கமல் இந்த வெரைட்டி. நடிகர் சூர்யா தலித் அரசியலைக் கையில் எடுத்திருக்கிறார்.

அரசியலுக்கு வருகிறாரா சூப்பர் ஸ்டார் சூர்யா?! தலீத் அரசியல் பேசும் ‘ஜெய் பீம்’ !!

ஜெய் பீம், அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக எழுந்து ஒடுக்கப்பட்டவர்களுக்கான நீதிக்காக போராடிய ஒரு மனிதனின் பயணத்தைப் பற்றிய ஒரு பரபரப்பான நீதிமன்ற அறை நாடகம் என்கிற அடைமொழியோடு வெளியாகியிருக்கிறது ட்ரைலர்.

செங்கேனி மற்றும் ராஜகண்ணு என்ற பழங்குடி ஜோடியின் வாழ்க்கைக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. ராஜகண்ணு பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு பின்னர் போலீஸ் காவலில் இருந்து காணாமல் போகும் போது அவர்களின் உலகம் சிதறுகிறது. ஜெய் பீம், ஆதரவற்றவர்களின் வாழ்க்கையில் வெளிச்சம் போல வெளிவரும் ஒரு மனிதனைப் பற்றிய ஒரு துடிப்பான கதை.

From around the web