குட் நியூஸ்... இன்றும், நாளையும் சிறப்பு ரயில்கள்... !
இந்தியா முழுவதும் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் பயணத்தேவைகளை பூர்த்தி செய்ய ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறைந்த கட்டணத்தில் தொலைதூர பயணங்கள் சாத்தியப்படுவதால் பலரும் ரயில் பயணங்களையே தேர்வு செய்கின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் தினசரி லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர்.
பேருந்து போன்ற மற்ற பொதுபோக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் மிக குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்கலாம். இதனால் முக்கிய பண்டிகை நாட்களில் மக்களின் வசதிக்காக ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது.அதன்படி சென்னையிலிருந்து நாகர்கோவில் மற்றும் திருச்சிக்கு இன்று 2 சிறப்பு விரைவு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
எழும்பூரில் இருந்து இன்று இரவு 10.45 மணிக்கு நாகர்கோவிலுக்கு ரயில் புறப்படுகிறது. நாளை ஆகஸ்ட் 3ம் தேதி காலை 11 மணிக்கு செல்லும். தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 11 மணிக்கு திருச்சிக்கும், திருச்சியிலிருந்து தாம்பரத்திற்கு நாளை இரவு 10.30 மணிக்கு முன்பதிவு இல்லா ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா