நாளை முதல் கூடுதல் மாநகர பேருந்துகள் இயக்கம்!
நாளை ஆகஸ்ட் 3ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படும் என ஏற்கனவே தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனை ஈடுசெய்யும் வகையில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் தாம்பரம் ரயில்வே யார்டு பணிகளுக்காக நாளை ஆகஸ்ட் 3ம் தேதி முதல் 14ம் தேதி வரை காலை 10.30 – பிற்பகல் 2.30 வரை, இரவு 10 – 12 வரை, பல்லாவரம் – கூடுவாஞ்சேரி இடையே ரயில்கள் இயங்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்நிலையில், அந்த நேரத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தற்போது இயக்கப்பட்டு வரும் பேருந்துகளுடன் கூடுதலாக பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டுக்கு 30 பேருந்துகளும், பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து கூடுவாஞ்சேரிக்கு 20 பேருந்துகளும், தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து தி.நகர் மற்றும் பிராட்வேக்கு 20 பேருந்துகள் என மொத்தம் கூடுதலாக 70 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
அதாவது, தாம்பரம் ரயில் நிலையத்தில் 03.08.2024 முதல் 14.08.2024 வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால். காலை 10.30 மணி முதல் பிற்பகல் 14.30 மணி வரையும் மற்றும் இரவு 22.00 மணி முதல் 23.59 வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம்/ செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் பல்லாவரம் இரயில் நிலையம் வரையும். செங்கல்பட்டிலிருந்து சென்னை கடற்கரை செல்லும் ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தற்போது இயக்கப்பட்டு வரும் பேருந்துகளுடன் கூடுதலாக பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டுக்கு 30 பேருந்துகள்.
பல்லாவரம் பேருந்து நிலையத்திலிருந்து கூடுவாஞ்சேரிக்கு 20 பேருந்துகள்
தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து தி.நகர் மற்றும் பிராட்வேக்கு 20 பேருந்துகள் என மொத்தம் கூடுதலாக 70 பேருந்துகள்
மேலும், காவல்துறையின் வேண்டுகோளின்படி தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் கூடுவாஞ்சேரி மார்க்கத்தில் செல்லும் அனைத்து பேருந்துகளும் இந்து மிஷன் மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் ஆகஸ்ட் 14ம் தேதி வரை தற்காலிகமாக நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா