இன்று முதல் தமிழகம் முழுவதும் 1140 சிறப்பு பேருந்துகள்... முன் பதிவு செய்துவிட்டீர்களா?
தமிழகம் முழுவதும் வார இறுதி நாட்கள், விடுமுறை, பண்டிகை , திருவிழா காலங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதுண்டு. மக்களின் வசதி மற்றும் தேவைகளின் அடிப்படையில் கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக்கழகம் பேருந்துகளை தயார் நிலையில் வைத்திருப்பது வழக்கமாக இருந்து வருகிறது.
அந்த வகையில் இன்று ஆகஸ்ட் 2ம் தேதி வெள்ளிக்கிழமை ,நாளை ஆகஸ்ட் 3ம் தேதி சனிக்கிழமை அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என வாரவிடுமுறை நாட்கள் வர உள்ளன. இதனையடுத்து தமிழகம் முழுவதும் இன்று முதல் ஆகஸ்ட் நான்கு வரை 1140 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வார விடுமுறை, நாளை ஆடிப்பெருக்கு மற்றும் நாளை மறுநாள் ஆடி அமாவாசையை முன்னிட்டு சென்னையிலிருந்து பல்வேறு நகரங்களுக்கும், திருச்சி, சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், நெல்லை மற்றும் நாகர்கோவில், மதுரை உட்பட பல்வேறு நகரங்களில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க www.tnstc.in மற்றும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா