தறிகெட்டு அலைபாய்ந்த லாரி... சுக்குநூறாய் நொறுங்கிய கார்... சம்பவ இடத்திலேயே 2 பேர் பலி!
சென்னை போரூர் வளசரவாக்கம் பாலமுருகன் நகரை சேர்ந்தவர் வினோத் (33). அவர் தனது குடும்பத்தினர் 7 பேருடன் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு சென்னை திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மழை பெய்ய தொடங்கியது. இந்நிலையில், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகத்தை அடுத்த படாளம் கூட்ரோடு பகுதியில் கார் வந்து கொண்டிருந்தது.
அப்போது பின்னால் வந்த லாரி கார் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த பார்வதியும், சிறுவன் சச்சினும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 5 பேர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலத்த காயமடைந்த 5 பேரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!