மெட்ரோவில் அதிர்ச்சி.. ஓடும் ரயிலில் கஞ்சா பயன்படுத்திய இளைஞர் அதிரடியாக கைது!

 
புவனேஷ்

திருவொற்றியூர் விம்கோ நகரில் இருந்து விமான நிலையம் வரை செல்லும் மெட்ரோ ரயிலில் பயணித்த இளம் பயணி ஒருவர் கஞ்சா பொட்டலங்களை பிரித்து புகை பிடிப்பதற்காக சுருட்டிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது சமூக வலைதளத்தில் புகைப்படம் வெளியிட்டது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

கைது

இது தொடர்பாக, கஞ்சா புகைக்க சுருட்டிய வாலிபரின் புகைப்படத்தை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த புவனேஷ் (24) என்பவர் இந்த விவகாரத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அந்த இளைஞரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர் அதில், தேனாம்பேட்டையில் உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த வாலிபர், கடந்த 25ம் தேதி, தண்டையார்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள வீட்டில் இருந்து வழக்கம்போல் வேலைக்கு செல்வதற்காக ரயிலில் புறப்பட்டு, அரசினர் தோட்டம் அருகே சென்று கொண்டிருந்த போது, ​​புவனேஷ் கஞ்சா பொட்டலத்தை பிரித்து உருட்டியுள்ளார்.

அப்போது, ​​சக பயணி ஒருவர் புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.இதுதவிர, கைதான புவனேஷ் மீது காசிமேடு காவல் நிலையத்தில் ஏற்கனவே ஆபாச வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், அந்த இளைஞர் கஞ்சாவை எங்கு வாங்கினார் என்பது குறித்த விவரங்களை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web