இல்லத்தரசிகளுக்கு ஷாக்... ஒரே நாளில் 2 வது முறையாக புதிய உச்சம்!

 
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!! வெறிச்சோடிய நகைக் கடைகள்!! மேலும் அதிகரிக்க வாய்ப்பு!

 
இன்று தங்கத்தின் விலை ஒரே நாளில் 2வது முறையாக உயர்ந்துள்ளது. இன்றைய மாலை விலை நிலவரப்படி சவரனுக்கு ரூ560 உயர்ந்து ஒரு சவரனுக்கு  ரூ.1,440 உயர்ந்து ரூ.66,400க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம்

இன்று மார்ச் 14ம் தேதி சவரன் ரூ65840க்கு விற்பனையான நிலையில் மாலையில் ரூ.66,400-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்ததால் ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்துள்ளதால் சாமானிய மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.


சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை  தொடர்ந்து 3  நாட்களாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று மீண்டும் தங்கத்தின்  விலை உயர்ந்துள்ளது. அதன்படி இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 880 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
தங்கம் நடிகைகள் பெண்கள் திருமணம்

இதனால் நகைப்பிரியர்கள், முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி காலை கிராமுக்கு ரூ110 உயர்ந்து  ஒரு  கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ8230க்கும், சவரனுக்கு ரூ880 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ65, 840-க்கும் விற்பனை செய்யப்பட்டது.  தங்கத்தின் விலை உயர்ந்த அதே நேரத்தில் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ2 உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி ரூ112க்கும், ஒரு கிலோ பார்வெள்ளி ரூ112000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web