பள்ளிகளுக்கு விடுமுறை... கலெக்டர் திடீர் உத்தரவு!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர்ந்து பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் ஒருசில இடங்களில் அதிகளவு மழை பொழிவு ஏற்படுவதால் நீரோடைகள் நிரம்பி திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதனையடுத்து சாலைகளில் ஆங்காங்கே மின்கம்பம் சாய்ந்துள்ளது.
மண்சரிவு , மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் மிகக் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நீலகிரியில் மழை நீடித்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு தொடங்கி விடிய விடிய நீலகிரியில் கனமழை பெய்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மழை காரணமாக கடந்த வாரத்தில் உதகை, குந்தா, கூடலூர் பந்தலூர் மற்றும் குன்னூர் ஆகிய தாலுக்கா பள்ளிகளிக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் முழுவதுமே பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!