ஜூலை 29 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... கலெக்டர் திடீர் அறிவிப்பு!
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. முருகனின் ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாக இந்த கோவில் திகழ்கின்றது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர்.
ஆடிக்கிருத்திகை முருகனுக்கு உகந்த நாளாக கூறப்படுகிறது. திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை, பழநி, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய முருகனின் அறுபடை வீடுகளில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஆடி கிருத்திகையும் ஒன்று. முக்கியமாக திருத்தணியில் ஆடிக்கிருத்திகை கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு ஆடி கிருத்திகை ஜூலை 29ம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 10 (சனிக்கிழமை) வேலை நாளாக செயல்படும் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!