பள்ளிகளுக்கு விடுமுறை... கலெக்டர் திடீர் அறிவிப்பு!
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் அதிக அளவு மழைப்பொழிவு ஏற்படுவதால் நீரோடைகள் நிரம்பி திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. சாலைகளில் ஆங்காங்கே மண்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. அப்பர் பவானி, அவலாஞ்சி பகுதிகளில் மழைப்பொழிவும் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் தொடங்கி விடிய விடிய நீலகிரியில் கனமழை பெய்ததால் 4 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஏற்கனவே கடந்த 4 நாட்களாக உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் 4 தாலுக்கா பள்ளிகளிக்கு விடுமுறை விடப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று கனமழை காரணமாக உதகை, குந்தா, குன்னூர், கூடலூர் ஆகிய 4 வட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா