சபரிமலையில் 2022 ஆண்டு நடை திறக்கப்படும் நாட்கள் அறிவிப்பு!!
Oct 22, 2021, 10:43 IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அடுத்த ஆண்டு (2022) பக்தர்களின் தரிசனத்திற்காக கோயில் நடை திறப்பு தேதி குறித்தான கால அட்டவணையை திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
வரும் 2022ம் ஆண்டு, மாசி மாத பூஜைக்காக கோவில் நடை பிப்ரவரி 12ம் தேதி திறக்கப்பட்டு 17ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
- பங்குனி மாத பூஜை மற்றும் ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு கோவில் நடை மார்ச் 8ம் தேதி திறக்கப்பட்டு 19ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
- மார்ச் 9ம் தேதி திருவிழா கொடியேற்றம் நடைபெறும். 18ம் தேதி பம்பையில் அய்யப்பனுக்கு ஆராட்டு விழா நடைபெறும்.
- சித்திரை மாத பூஜைகளுக்காக ஏப்ரல் 10ம் தேதி நடை திறக்கப்பட்டு 18ம் தேதி வரை சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடக்கும். 15ம் தேதி விஷு பண்டிகை விழா நடைபெறுகிறது.
- வைகாசி மாத பூஜைக்காக மே 14ம் தேதி நடை திறக்கப்பட்டு 19ம் தேதி நடை அடைக்கப்படும்.
- சபரிமலை அய்யப்பன் விக்ரகம் நிறுவப்பட்ட நாளையொட்டி 8ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 9ம் தேதி சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
- ஆனி மாத பூஜைக்காக ஜூன் 14ம் தேதி நடை திறக்கப்பட்டு 19ம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். ஆடி மாத பூஜைக்காக ஜூலை 16ம் தேதி நடை திறக்கப்பட்டு 21ம் தேதி வரை பூஜைகள் நடைபெறும்.
- ஆவணி மாத பூஜைக்காக ஆகஸ்டு 16ம்தேதி நடை திறக்கப்பட்டு 21ம்தேதி வரை பூஜைகள் நடக்கும்.
- ஓணம் பண்டிகையையொட்டி செப்டம்பர் 6ம் தேதி முதல் 10ம் தேதி வரை பூஜைகள் நடக்கும்.
- புரட்டாசி மாத பூஜைக்காக மீண்டும் சபரிமலை அய்யப்பன் கோவில் நடை செப்டம்பர் 16ம் தேதி திறக்கப்பட்டு 21ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
- ஐப்பசி மாத பூஜைக்காக அக்டோபர் 17ம் தேதி நடை திறக்கப்படும். 22ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
- சித்திரை ஆட்ட விஷேச பூஜைக்காக மீண்டும் சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அக்டோபர் 24ம் தேதி திறக்கப்படும். 25ம் தேதி சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
- வரும் 2022ம் ஆண்டு சபரிமலை மண்டல பூஜைக்காக நவம்பர் 16ம் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்படும். டிசம்பர் 27ம் தேதி மண்டல பூஜை சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
From around the
web