ஆடு மேய்த்தவருக்கு சாலையோரம் பிரசவம்! தாயும் சேயும் நலம்!
Aug 28, 2021, 14:10 IST
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி முல்லை நகர் இருளர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் பாபு. இவருடைய மனைவி 30 வயதான குமாரி. நிறைமாத கர்ப்பிணியான இவர் செஞ்சி கோட்டை ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் வலியால் அலறித்துடித்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதைக் கண்டு உடனடியாக , 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.
சற்று நேரத்தில் ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் அய்யனார், ஓட்டுநர் செல்வமணி ஆகியோர் விரைந்து வந்து சாலையோரம் படுத்திருந்த குமாரிக்கு அங்கேயே பிரசவம் பார்த்ததில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து குழந்தையையும், தாயையும் ஆம்புலன்சில் ஏற்றி செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். தாயும், சேயும் நலமாக இருக்கிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
From around the
web