நம்ம மாவட்டத்துக்கு ரெட் அலெர்ட்... வீட்டை விட்டு வெளியே வராதீங்க!
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தமிழகத்தில் வங்கக் கடலில் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை ஜூலை 19ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது ரெட் அலர்ட்டாக மாற்றி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அடுத்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் 21 சென்டி மீட்டருக்கு மேல் மழை பொழியும் என எதிர்பார்க்கப்படுகிறது ஊட்டி, கூடலூர், மஞ்சூர் மற்றும் தேவாலா பகுதிகளில் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா