இன்று விருது வாங்கினார் ரஜினி!!

 
இன்று விருது வாங்கினார் ரஜினி!!


இன்று அக்டோபர் 25ம் தேதி டெல்லியில் தாதா சாகேப் விருது வாங்குகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, தான் விருது பெறுவது மகிழ்ச்சி என்றும், இந்நேரத்தில் இயக்குநர் பாலசந்தர் இல்லாதது வருத்தம் என்றும் தெரிவித்தார். மேலும் 2 நல்ல விஷயங்கள் என்று குறிப்பிட்ட ரஜினி, தனது மருமகன், செளந்தர்யாவின் கணவர், விசாகன் புதிய செயலி ஒன்றை உருவாக்கி இருப்பதாகவும், அதனை இன்று ரஜினி வெளியிடுவதாகவும் தெரிவித்தார்.

இன்று விருது வாங்கினார் ரஜினி!!

ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு சார்பில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருதுகளை இந்தியாவின் திரைப்பட விழாக்கள் இயக்குனரகம் வழங்கி வருகின்றன.

இன்று விருது வாங்கினார் ரஜினி!!

அந்த வகையில் நடப்பாண்டிற்கான தேசிய திரைப்பட விழா அக்.25ம் தேதி டெல்லியில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில், நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது.


தமிழ்த் திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் இந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். 51வது தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதற்கான நிகழ்ச்சி வரும் இன்று டெல்லியில் நடைப்பெறுகிறது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற விழாவில் ரஜினி இன்று இந்த விருதை வாங்கினார்

From around the web