நாற்காலியை காப்பாற்றுவதற்கான பட்ஜெட்... ராகுல் காந்தி விமர்சனம்!
இன்று ஜூலை 23ம் தேதி செவ்வாய்க்கிழமை மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். இது குறித்து தலைவர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் மத்திய பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நாற்காலியை காப்பாற்றுவதற்கான பட்ஜெட்' என தெரிவித்துள்ளார்.
மேலும் ``கூட்டணி கட்சிகளை தாஜா செய்தும், மற்ற மாநிலங்களை வஞ்சித்தும் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது''. ``அம்பானி மற்றும் அதானிக்கு பயனளிக்கும் பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது'' "பெரு முதலாளிகளை குஷிப்படுத்தியும், சாமானிய மக்களுக்கு எத்தகைய நிவாரணமும் வழங்காத பட்ஜெட் இது என கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை மற்றும் முந்தைய பட்ஜெட்டை காப்பி பேஸ்ட் செய்யும், பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது'' என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா