புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளுநர் உரை... திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு!
இன்று காலை புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், ஆளுநர் பேசத் தொடங்கியதுமே திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் எழுந்து நின்று பேசத் தொடங்கினர். “முதலில் எனது உரையை கேட்டு விட்டு தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். புதுச்சேரி சட்டப் பேரவையில் எனது முதல் உரை இது. வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட்டதால் இதுவே கடைசி உரையும்” என்று ஆளுநர் பேசத் தொடங்கினார். அப்படியும் சமாதானமாகாத திமுக, காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் எதையுமே நிறைவேற்றவில்லை என விமர்சித்துவிட்டு பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று பேரவையில் உரை நிகழ்த்துவதற்காக துணை நிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவைக்கு வந்தார். அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. தேசியகீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து பேரவைத்தலைவர் செல்வம், ஆளுநரை வரவேற்று மைய மண்டபத்துக்கு அழைத்து வந்தார். அங்கு பேரவைத் தலைவர் இருக்கையில் ஆளுநர் அமர்ந்தார். தமிழ்தாய் வாழ்த்துடன் சபை நிகழ்வுகள் தொடங்கின.
பேரவையில் ஆளுநர் ராதாகிருஷ்ணன் பேசத் தொடங்கியபோது, எதிர்க் கட்சித்தலைவர் சிவா உள்ளிட்ட திமுக, காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் எழுந்து நின்றனர். சிவா ஆளுநரிடம் அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கத் தொடங்கினார்.
அதற்கு ஆளுநர், "தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். அரசு தரப்பில் திருத்திக் கொள்ளட்டும். முதலில் எனது உரையைக் கேளுங்கள். தயவு செய்து அமருங்கள். இது எனது முதல் உரை. வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட்டதால் இதுவே எனது கடைசி உரை. தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றதற்கு வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டு பேசத் தொடங்கினார்.
அப்போது எதிர்க்கட்சித் தலைவர் சிவா மற்றும் திமுக, காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் எழுந்து நின்று, "எதுவுமே நிறைவேற்றாமல் நிறைவேற்றியதாக படிக்கிறீர்கள்" என்று சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினர். ஆளுநர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். இதையடுத்து அரசைக் கண்டித்து திமுக, காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் வெளிநடப்பு செய்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!