குறிச்சிக்கோங்க... இன்று எந்தெந்தப் பகுதிகளில் மின்தடை ..!
தமிழகத்தில் பராமரிப்பு பணி காரணமாக பகுதி வாரியாக மாதம் ஒரு முறை மின் தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை ஜூலை 27ம் தேதி சனிக்கிழமை எந்தெந்த பகுதிகளில் எல்லாம் மின்தடை ஏற்படும் என தமிழக மின்வாரியம் அறிவித்துள்ளது. தென் சென்னை – பெசன்ட் நகர் 2வது பிரதான சாலை பெசன்ட் நகர், 16-வது குறுக்குத் தெரு முதல் 25-வது குறுக்குத் தெரு, 3வது மெயின் ரோடு பெசன்ட் நகர், CPWD குடியிருப்புகள் (புதிய), 6வது அவென்யூ பெசன்ட் நகர், ஓடைக்குப்பம் பகுதி, திதிர் நகர் பகுதி இடங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை ஏற்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. மக்கள் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு மின்வாரியம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை சென்னையில் மின் தடை செய்யப்படும் பகுதிகள்
அம்பத்தூர் பகுதியில் அம்பத்தூர் சிட்கோ, சீனிவாசன் நகர், 7வது தெரு முதல் 8வது தெரு, 8வது குறுக்கு முதல் 9வது குறுக்கு தெரு, வடக்கு கட்டம் 9வது தெரு, சிட்கோ, தொழிற்பேட்டை, பொன்னியம்மன் நகர், 10வது தெரு, 11வது தெரு, பொன்னியம்மன் கோயில் சுற்றுவட்டார பகுதி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் பகுதி ஆகியவை.
அண்ணாநகர் பகுதியில் சாந்தி காலனி, பெரியகூடல், பாரதிபுரம், கஜலட்சுமி காலனி பகுதி, ஷெனாய் நகர் மேற்கு, 1வது பிரதான சாலை, மேற்கு பூங்கா சாலை ஆகியவை.
பொன்னேரி பகுதியில் கும்மிடிப்பூண்டி பஜார் முழுவதும், ஜிஎன்டி சாலை, பெத்திக்குப்பம் ரயில்வே பாலம், பாலகிருஷ்ணாபுரம், மா.பொ.சி.நகர், வேர்காடு, ரெட்டம்பேடு பிரதான சாலை, ஆத்துப்பாக்கம், ஏனாதிமேல்பாக்கம், சோலியம்பாக்கம், தேர்வாழி, தம்புரெட்டி பாளையம், அப்பாவரம், மங்கவரம், குரிவியகரம் கிராமங்கள் ஆகியவை.
அடையாறு பகுதியில் பெசன்ட் நகர் 1வது பிரதான சாலை முதல் 2வது பிரதான சாலை, 16வது குறுக்குத் தெரு முதல் 25வது குறுக்குத் தெரு, 3வது பிரதான சாலை பசந்த் நகர், CPWD குவாட்டர்ஸ், 6வது அவென்யூ பெசன்ட் நகர், ஓடைக்குப்பம் பகுதி, திடீர் நகர் பகுதி மற்றும் 7வது அவென்யூ பகுதி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா