பூஜாவின் ஐஏஎஸ் பதவி ரத்து; இனி தேர்வுகளில் கலந்து கொள்ள தடை!
போலி சான்றிதழை பயன்படுத்தி தேர்வெழுதிய சர்ச்சைக்குரிய ஐஏஎஸ் பயிற்சி மாணவி பூஜா கேத்கர் மீது கடும் நடவடிக்கை எடுத்துள்ளது யுபிஎஸ்சி. பூஜா கேத்கரின் ஐஏஎஸ் பணியை ரத்து செய்து, பூஜாவுக்கு காரணம் கேட்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் இனி வரும் காலங்களில் சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் கலந்து கொள்வதில் இருந்து பூஜா முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளார். யுபிஎஸ்சியின் புகாரின் பேரில் டெல்லி போலீசார் பூஜா மீது வழக்கு பதிவு செய்தனர். பூஜா தனது பெயர், பெற்றோர் பெயர், புகைப்படம், கையொப்பம், மின்னஞ்சல் ஐடி, அலைபேசி எண் மற்றும் முகவரி என அனைத்தையும் மாற்றி, அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக தேர்வில் ஆஜராகியிருப்பது விசாரணையில் தெரியவந்ததன் அடிப்படையில் பூஜா மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
புனே கலெக்டர் அலுவலகத்தில் தனது தகுதிகாண் பயிற்சியின் ஒரு பகுதியாக 32 வயதான பூஜா கேத்கர், சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) மற்றும் பெஞ்ச்மார்க் ஊனமுற்றோர் (PWBD) ஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார். இதைத் தொடர்ந்து, டேராடூனில் உள்ள சிவில் சர்வீஸ் அகாடமியால் மீண்டும் அழைக்கப்பட்டார்.
இதற்கிடையே நிலத் தகராறு தொடர்பாக துப்பாக்கியைக் காட்டி, விவசாயிகளைத் தாக்க முயன்ற வழக்கில் பூஜாவின் தாய் மனோரமா கைது செய்யப்பட்டார். லஞ்சம் பெறுவதற்கும், சக்திக்கு மீறிய செல்வத்தைப் பெற்றதற்கும், தீவிர அரசு ஊழியரான தந்தை. அந்த வழக்கில் பிரதிவாதியாக இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா